குருட்டுச் சிற்பி !

அழகாகச் செதுக்கிய
சிற்பங்களை உடைத்தெறிந்து
ஆனந்தங்கொள்ளும் அணங்குகளிற்கு...

தெறித்துக் கிடக்கும் சிற்பப் பிணங்களின்
ஊமை அழுகுரல்கள் கேட்பதில்லை!

சிற்பத்தை சீரெடுத்த
உளிகளின் வலிகளும்...
கலைஞனின் கதறல்களும்...
எப்பொழுதும் புரிவதில்லை!

உடைந்துபோன சிற்பச் சிதறல்களை
ஒவ்வொன்றாய்ப் பொறுக்கியெடுத்து,
ஒட்டவைத்து மீண்டும்
உயிர்கொடுக்கும் ஆசையுடன்,

காணாமற்போன ஒருதுண்டை...
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றான் குருட்டுச் சிற்பி!

கூர்மையான விழிகளுடன் காத்துக்கிடக்கின்றன உளிகள்...
புதிதாய் ஒரு சிற்பம் வடிக்க...!

எழுதியவர் : ஒருவன் கவிதை (12-Sep-13, 8:51 am)
பார்வை : 66

மேலே