கருகிப் போகட்டும் காழ்ப்புணர்ச்சிகள்.....!

விடிகாலையின் கோலம்
விரிகின்ற புது மலர்கள்
விசாலமான சிந்தனையில்
விரும்பப் படும் பல உயிர்கள்
கசப்பென்பது விழி அறியுமோ ?
காணும் மனம் கட்டளையின்றி...!
கருணையை மனசில் வைத்தால் இனி
கசப்பென்பதும் இனித்தே இருக்கும்...!