+ஒவ்வொரு நாளையும் கொண்டாடு!+

ஒவ்வொரு நாளையும் கொண் டாடு!
உனக்கென விடிந்தது பண் பாடு!
உலகத்தில் பிறந்திட் டாய் மனிதனாக‌
வாழ்க்கையை வாழு வாய் புனிதனாக‌

கண்ணுண்டு உனக்கு பார்ப் பதற்கு
காதுண்டு இனியவை கேட் பதற்கு
கையும் காலும் இருக்கும் போது
கவலைகள் எதற்கு உழைப் பதற்கு?

உணவும் உனக்குண்டு உண் பதற்கு
நீரும் உனக்குண்டு குடிப் பதற்கு
நிம்மதி கொண்டே வா ழாமல்
வீணாய் போவதும் சரியாய் சொல்!

சிறுசிறு நிகழ்வுக்கு சிரித்து விடு!
குறுகுறு எண்ணங்கள் தவிர்த்து விடு!
உண்மையை மட்டுமே பேசி விடு!
நன்மையை மட்டுமே நினைத்து விடு!

இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி கொள்ளு!
மழலைப் போலே நீயும் துள்ளு!
நல்லோர் சிறந்திட மன் றாடு!
கவலைகள் மறையும் இன் றோடு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி ‍‍‍ ‍‍‍‍‍‍‍ (23-Sep-13, 3:55 pm)
பார்வை : 62

மேலே