யார் இவள் !
எங்கிருந்து வந்தாளோ -இவள்
என்னுடனே இருந்தாள்.
எதற்காக வந்தாளோ -இவள்
எனக்காவே வாழ்ந்தாள்.
யார் இவள் ?
கேட்டேன் அவளிடமே ஓர்நாள்
"தங்க பிள்ளைக்கு அம்மா யாரு" என்றாள் சிரிப்புடன்.
கருநிற தங்கத்தை இன்று வரை காட்டாமல்.
யார் இவள்!