+தப்பு அனைத்தும் சரியா நடக்குது!+
தான் வாழும் காலத்தில்
தனக்கு மட்டும்
எல்லாம் கிடைத்தால் போதும்!
பாவம் மட்டுமே இங்கு
பக்குவமா நடக்குது!
யாகமோ
அதனால் கிடைக்கும்
யோகமோ
யாருக்கும் கிடைத்தால் என்ன?
கிடைக்காவிட்டால் என்ன?
தன் தடம் மட்டுமே சரியாக அமைந்து
தடை ஏதும் இல்லையென்றால்
தடயம் கூட விடாமல்
தப்பு அனைத்தும் சரியா நடக்குது!
நடக்கவேண்டிய சரிகள் எல்லாம்
தப்பு தப்பாக போய்விட்டது!