+போன திசை தெரியலையே!+

பாட்டனுக்கும்
பாட்டனுக்கு பாட்டனுக்கும்
சோறு போட்ட நஞ்சக்காடு
போனதிசை தெரியலையே!

சொந்தமும்
ஊருசனம் அத்தனையும்
பொங்கவச்ச ஆத்துமேடு
புதைஞ்ச வீடு தெரியலையே!

முன்னேற்றமாம்!
பாரதம் செழிக்கிறதாம்!
நிலங்களையெல்லாம் கெடுத்துவிட்டு...
விவசாயத்தை புதைத்துவிட்டு...

இருக்கும் நிலத்தில்
விதை போட்டாலும்
விஷம் தான் முளைக்குது!

தப்பித்தவறி
மழை பெய்தாலும்
கிடைக்கும் தண்ணீருக்கும்
மல்லுக்கட்டும்
பலரின் ஒற்றுமையால்
கிடைப்பது தான் என்ன?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Sep-13, 11:17 pm)
பார்வை : 54

மேலே