ஏன் இந்த ஜனனம் ?

பசிக்காய் வாய் பிளக்கும்
பறவைக் குஞ்சி பாவமா ? - அதன்

பசிக்காய் உயிர் விட்ட சின்ன
பட்டுப் புழு பாவமா ?

ஏனிந்த ஜனனம்
ஏனிந்த மரணம்

கல்லாய் கிடந்தேன்
காலப் பயன் இன்றி.....

என் மீது தேங்கிய
மழை நீரில்

இறந்த புழு
மீண்டும் பிறந்தது - உணவுக்காய்......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (30-Sep-13, 1:33 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 66

புதிய படைப்புகள்

மேலே