மண்ணில் மறைந்தாலும் மாறாத காயங்கள் 555

பெண்ணே...

உன்னை என்
உயிரென நினைத்தேன்...

உன் பின்னால்
வந்தேன்...

என் விழிகள்
சொல்லவந்த காதலை...

என் இதழ்களே
சொன்ன போது...

நீ ஏளன புன்னகையில்
ஏற்றாய்...

எனக்கு அப்போது
தெரியவில்லையடி...

நீ என்னை உன் பொழுது
போக்கிற்காக உபயோகிகிறாய்...

உன் வார்த்தைகளால்
எனக்கு தந்தாயடி...

வலிகளை என் வாழ்நாளில்
மறக்கமுடியாத வார்த்தையாடி...

பெண்ணே...

வலி தாங்கிய
உள்ளம் என்றாலும்...

உன் வார்த்தை
என்னும் முட்களை...

தாங்க முடியவில்லையடி...

பெண்ணே ஆயிரம் ஊசி
முனையில் உறங்குவது போல்...

நீ உதிர்த்த உன்
வார்த்தை போதுமடி...

நீ எனக்கு தந்த
இந்த காயங்கள்...

என்றும் மாறாதடி நான்
மண்ணில் மறைந்தாலும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Oct-13, 9:46 pm)
பார்வை : 189

மேலே