அழைப்பு வந்தது

அன்று காலை இரயில் இரயில் நிலையம் வந்து நின்றது. அந்த இராணுவ உடை அணிந்தவன் இரயில்லிருந்து இறங்கினான்,
அவனுகென்று அந்த நிமிடம் அங்கு ஏதும் சொந்த மில்லை .

அவன் பாதம் ஒரு ஒற்றை அடி பாதையில் நடந்துக்கொண்டிருந்தது அதன் முடிவில் கிடைத்தது அந்த ஊர்

சென்னையின் வெளிப்பகுதி ,
சென்னை மக்களில் மொழி வாடை மட்டுமே இங்கே, அந்த இராணுவ உடை அணிந்தவன் நேர அங்கிருந்த ஒரு கடையின் வாசலில் வந்து நின்றான்...................................




வழக்கம் போல தன் சைக்கிள் கடைக்கு செல்ல தயாரானான் சண்முகம். 10வதொடு படிப்பு இவனுக்கு டாட்டா சொல்லிவிட்டு போய்விட்டது இல்லை இல்லை இவன்தான் அதை திரத்திவிட்டான்

காரணம் இவன் படிக்கவேண்டும் பெரிய ஆளாய் வரவேண்டும் என்று எதிர்பார்த்தது அவன் அம்மா.
அவரும் இப்போது இல்லை.
சண்முகம் பிறந்த போது அவன் தந்தை குடிக்கு அடிமையாகி தன் உயிரை விலையாக கொடுத்துவிட்டார் அதன் விளைவாக "பொறக்கும்போதே அப்பன கொன்னுட்டான் " என்ற அவப்பெயரோடு பிறக்க நேர்ந்தது
அதன் பின் சண்முகத்திற்கு எல்லாமே அம்மா தான் ஊராரின் வசை மொழியில் தன் மகன் வளர்வது சண்முகத்தின் தாய்க்கு பெரிய மன உளைச்சலை தந்தது அவனை அவதுறாக பேசுவோரிடம் "அந்த ஆளு குடிக்கும்போது எவனும் தடுக்க காணும் இப்ப என் புள்ளைய குத்தம் சொல்ல வரிஞ்சிகட்டிகிட்டு வந்துடிங்களா போங்ககைய" என்று தன் ஆதங்கத்தை கொட்டினால்
மனைவியின் பேச்சை கேட்டு நடப்பது அவமானம் ஆண்மை அற்ற செயல் என்று எண்ணுபவன் சங்கரன் (சண்முகத்தின் தந்தை) இவனை அவன் நண்பர்களாவது திருத்தி இருக்கலாம் குடியிலிருந்து மீட்டிருக்கலாம் என்பது மீனாட்சியின் (சண்முகத்தின் தாய் ) கருத்து. அது இல்லாமல் போகவே அனைவர் மீதும் வெறுப்பு தான் வந்தது அவளுக்கு. அந்த ஊரே வேண்டாம் என்று அதை விட்டு வந்து விட்டார்
ஒரு வழியாக கூலி வேலை வீடு வேலை செய்து தான் மகனை 10வரை படிக்க வைத்தாள். காலத்தின் கோலம் சண்முகம் 10-பொது தேர்வு எழுதும் நேரம் மீனாட்சி இவ்வுலக வாழ்க்கை போதும் என்று முடிவில் தன் கண்களை மூடிவிட்டாள். அந்த நொடி முதல் சண்முகத்திற்கு எல்லாமே இருட்டு தான். அவனது உலகமே அஸ்தமனம் ஆகிவிட்டதாகவே அவன் எண்ணம் .

அன்று முதல் படிப்பு வேலை வாழ்க்கை எதன் மீதும் அவனுக்கு பிடிப்பு இல்லை அவனை பொருத்தமட்டில் கல்லறையில் தூங்கும் தன் தாய் என்னும் தெய்வம் ஒரு நாள் தன்னை தன் மடியில் சேர்த்து தூங்க வைக்கும் தன்னுடன் அழைத்துகொள்ளும் என்ற எண்ணம் மட்டும் தான் அவனுக்கு அதுவரை அவன் இந்த உலகில் இருக்க அவன் தேர்ந்தெடுத்தது தான் இந்த தொழில் , சைக்கிள் கடை வைத்து வேலை செய்வான் கிடைக்கும் பணத்தில் தன் சாப்பாட்டிற்கு மட்டும் எடுத்துக்கொள்வான் மற்றதை அவனுடன் இருக்கும் சிறுவனுக்கு கொடுத்து விடுவான்
"ஏன் அண்ணாத்த உன்ட ஒன்னு கேகட்டா எப்பயும் சாப்பாட்டுக்கு மட்டும் எடுத்துகிட்டு அல்லாத்தையும் அல்லாருக்கும் கொடுக்குறியே உனக்குன்னு ஏதும் வசிக்க மாட்டியா" இந்த கேள்வியை அந்த சிறுவன் பல முறை கேட்டு விட்டான் சண்முகத்தின் பதில் ,"வேலைய பாருடா சேத்து வைக்கவாம் சேத்து, சேத்து வச்சி என்ன டா பண்ண போறோம். யார் எவ்ளோ சேத்து வச்சாலும் போறப்போ எதையுமே கொண்டு போறதில்லை. நெத்தில இருக்க ஒத்த ஒருவவாக்கூட வெட்டியான் எடுத்துக்குவான் ஒத்த சுனாமி வந்து எத்தன பேர கொன்னுச்சு அவெங்கெல்லம் துட்டு வச்சவன் துட்டு இல்லாதவன்னு எதாவது பாத்துச்ச இதுல என்னத்துக்குடா சேத்து வைக்கணும்."
எல்லா விசயத்திலையும் அவனுக்கென்று ஒரு தத்துவம் வைத்திருப்பான் . இந்த உலகில் அவன் தாய் மட்டுமே தெய்வம் வேற ஏதும் இல்லை என்பது அவன் எண்ணம்

அவன் வைத்திருந்த சைக்கிள் கடைக்கு அருகில் தேநீர் விடுதி இருந்தது அந்த தேநீர் விடுதிக்கு ஒரு முதியவர் வருவார் அவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அவர் அங்கு தன் ராணுவ அனுபவங்களை பற்றி அதிகம் பேசுவார். நாளிதழ்களில் வரும் அன்றாட செய்திகளை பற்றி விமர்சனம் செய்வார். அவரின் விமர்சனத்தை கேட்க பெரும் கூட்டமே கூடிவிடும்
எதன் மீதும் நாட்டம் இல்லாத சண்முகத்திற்கு ஏனோ இவரின் பேச்சுக்கள் பிடிக்க ஆரம்பித்தது. அவரின் பேச்சுக்களை பற்றி அதிகம் சிந்தனை செய்ய ஆரம்பித்தான்

அன்று இரவு அவனால் தூங்க முடிய வில்லை காரணம் அந்த முதியவர் அன்றைய நாளிதழில் வந்த செய்தியை படித்துவிட்டு கூறிய விமர்சனம் தான் அவன் அதை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தான். காலையில் நடந்தது அவன் மன அலைகளில் ஓட ஆரம்பித்தது.

காலையில் அந்த முதியவர் வந்தது வழக்கம் போல நாளிதழை புரட்டினார். அதில் தலைப்பு செய்தியாக வந்தது "ராணுவ அதிகாரி மரணம் . ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி நேற்று மரணம் "- இதை படித்த மாத்திரத்தில் அவருக்குள் பெருமிதமும் வருத்தமும் ஒரு சேர கிடைத்தது

அடுத்த செய்தியாக "டெல்லி மாணவி கற்பழிப்பு '
இந்த செய்தியை படித்ததும் அவரின் குரல் கோபத்தில் கர்ஜித்தது

"ராணுவத்தில் நான் இருந்தப்போ நம்ம படைல எவ்ளோ பேர் என்ன என்ன தியாகம் பண்ணிருக்காங்க ஆனா இப்ப நடந்திருக்க இந்த சம்பவம் சமூகத்தோட செல்லரிப்ப தான் காட்டுது. எந்த விஷயம் நடந்தாலும் அத வெறும் செய்தியா மட்டும் பாக்குறது அதுக்கும் அரசியல் சாயம் பூசி போராட்டம்னு ஆரம்பிச்சி கலவரங்கள தூண்டுறது இதுதான் இப்ப சமூகத்தோட நிலை இது கண்டிப்பா மாறியே ஆகணும். இப்ப நடந்த சம்பவத்திற்கு இவ்ளோ முக்கியத்துவம் குடுக்குற பத்திரிக்கையெல்லாம் இலங்கைல இதே அவஸ்தைய பட்டுட்டு இருக்குற தமிழின பெண்கள பத்தி முழுசா எந்த செய்தியையும் குடுக்குரதில்லையே ஏன்? இதையெல்லாம் இந்த தள்ளாத வயசுல தட்டி கேக்கணும்னு எனக்கு தோணுது ஏன் இந்த பசங்களுக்கு தோன மாட்டுது நான் ஒன்னும் உங்கள கத்தி , துப்பாக்கி எடுத்துக்கிட்டு போய் போராட சொல்லல ஆனா இன்றைய இளைய சமுதாயம் நெனச்சா சரித்திரத்தையே மாத்தி எழுத முடியும் அட ஒரு வயோதிகர் இவங்க மேல நம்பிக்கவச்சி நாட்ட காப்பத்துவாங்கனு கனவு கண்டுட்டு இருக்காரு ஆனா அந்த நம்பிக்க இந்த இளைய சமுதாயத்துக்கு இல்லையே அப்படி இருந்த இப்படி ஒதுங்கி நின்னு வேடிக்க பாப்பாங்கள அவங்க கைல வீதி போராட்டம் , கலவரம் மறியல்னு ஏதும் செய்ய வேண்டாம் வேகம் உள்ள இளைஞர்கள் ராணுவத்தில சேரலாம் விவேகமுள்ள இளைஞர்கள் சமூகப்பணி தன்னலமில்லா அரசியல்னு நாட்ட உயர்த்தலாம் . கனவு மட்டுமே கண்டு கிட்டு இருந்தா வாழ்க்கை நெஜமாகுரது எப்போ"

இதை மீண்டும் மீண்டும் நினைத்து பார்த்தான் சண்முகம் அவர் சொல்லிய வார்த்தையில் தான் எத்தனை உண்மைகள் தனகென்று ஏதும் வேண்டாம் என்று இருந்தவன் முதல் முறையாக தனக்கான பாதையை தேர்ந்தெடுத்தான்

பொழுது புலர்ந்தது தனக்கான விடியல் வந்த மகிழ்ச்சியில் எழுது சென்றான்.
அவன் எங்கு சென்றான் என்ன ஆனான் எதுமே யாருக்கும் தெரியவில்லை அவன் உடன் இருந்த சிறுவனும் தன்கென்று ஒரு வேலையை தேடிக்கொண்டு அவன் பாதையில் சென்று கொண்டிருந்தான் ஆனால் அவன் மனதில் என்றேனும் சண்முகம் வருவான் என்ற எண்ணம் இருந்தது.

ஓராண்டு காலம் கழித்து ,,,,,,,,,,,,,,

இதோ அந்த எண்ணம் உண்மையாகி விட்டது
சண்முகம் வந்து விட்டான். அவன் வேகம் மிகுந்த இளைஞன் ஆனதால் அவன் தேர்ந்தெடுத்த பாதை இராணுவம்

அவன் (தேச)அன்னை அவனை அழைத்து விட்டால் அவனும் சென்று விட்டான் அவளை காக்கவும் இறுதியாக அவள் மடியிலேயே தூங்கவும் ..............

எழுதியவர் : நிலைமைகள் (4-Oct-13, 5:48 pm)
Tanglish : azhaippu vanthathu
பார்வை : 193

மேலே