அநாதை விருட்சம்

தந்தை யாரோ?
தாய் யாரோ?
அறியேன் இன்னும்
அநாதை இல்லத்தில்
அடைக்கலமானேன்…..
தந்தையின் பாசம்
தாயின் அரவணைப்பு
எதுவும் மற்று அனாதையாய்…..


அக்கா அண்ணா
தம்பி தங்கை
இரத்த பந்தம்
எதுவும் அறியேன்
எல்லாம் இழந்து அநாதையாய்…….

எல்லோரையும் நேசிக்கவும்
உறவற்ற உறவுகளுக்கு அர்த்தம்
கொடுக்கும்
உள்ளங்களையும்
உணர்வுகளுடனான நட்புக்களையும்
செய்நன்றி உணர்வுகளையும்
என்னில் புகுத்தி
என்னை விருட்சமாக்கியது
அந்த அநாதை இல்லம்!

எழுதியவர் : puviluxy (7-Jan-11, 5:21 pm)
சேர்த்தது : m.puvitharan
பார்வை : 350

மேலே