என் தாயே!

திசை மாறி பறக்கும் பறவையை போல
நிலைகெட்டு நானும் திரியிறேம்மா

புல் மீது படரும் பனித்துளி போல
சில நொடி நீயும் வருவாயம்மா

உன்னோடு நானும் கைகோர்த்து நடக்க
நாட்களும் எனக்கு உருண்டோடி போகும்

என்னை நீயும் பெற்றெடுத்தாய் பக்குவமாய்
உன்னை வாழ வைக்கவில்லை சத்தியமாய்

காலம் போனபின்பு என்னில் தெரியுதம்மா
வாழ்வதிங்கு வீணோ என்று தோணுதம்மா

எழுதியவர் : Thavam (7-Jan-11, 4:22 pm)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
பார்வை : 332

மேலே