எது ஆண்மை?!...

காமமற்ற பார்வைபெற்ற
கண்கள்உள்ள ஆண்களும்;
காயசொல்லை சொல்லிடாத
வாயும்உள்ள ஆண்களும்;
துயரைக்கேட்டு துடைக்க துடிக்கும்
செவிகள்பெற்ற ஆண்களும்;
தவறுசேற்றின் நாற்றம்வெறுக்கும்
நாசிபெற்ற ஆண்களும்;
முடியா செயலை முடித்து முடியை
முடியில் தாங்கும் ஆண்களும்;
உழைக்கும்கரத்தை உயர்த்தும்கரத்தை
வரமாய்பெற்ற ஆண்களும்;
உண்மைவழியில் உறுதியாய்நடக்கும்
கால்கள்பெற்ற ஆண்களும் -

ஆண்மை சொல்லின் ஆளுமைபெற்ற
அழகிய திருமிகு ஆடவர்கள்!
அவர்களே வாழ்கையை ஆள்பவர்கள்!

எழுதியவர் : அருள் ராம் (9-Oct-13, 11:07 am)
சேர்த்தது : arul ram
பார்வை : 62

மேலே