முன்னோக்கி நடந்தால் தோள் மீது வெற்றி மாலை

குட்டிச் சுவரே மாளிகை என
குறுகிய மனசே நினைப்பதேன் ?

விழிகளை உயர்த்து மேல் நோக்கி
விரிந்தே வானம் அழகாக......!

பார்வையை குறுக்கிப் பழகாதே
பாரெல்லாம் இன்பத்தை பழகிக்கொள்..

சுயநலச் சேற்றில் புரளாமல்
சுற்றத்தை மேல்நோக்கி அழைத்துச் செல்....

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (9-Oct-13, 11:15 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 55

மேலே