முன்னோக்கி நடந்தால் தோள் மீது வெற்றி மாலை
குட்டிச் சுவரே மாளிகை என
குறுகிய மனசே நினைப்பதேன் ?
விழிகளை உயர்த்து மேல் நோக்கி
விரிந்தே வானம் அழகாக......!
பார்வையை குறுக்கிப் பழகாதே
பாரெல்லாம் இன்பத்தை பழகிக்கொள்..
சுயநலச் சேற்றில் புரளாமல்
சுற்றத்தை மேல்நோக்கி அழைத்துச் செல்....