கைகள் என்றும்...........

மனதிலும் சிந்தையிலும் தூய்மை
என்பதை காட்ட
வெள்ளை தாமரையில்
வீற்றிருக்கும் சரஸ்வதி தாயே....

உன்னை நினைத்து
உன் பாதம் பணிந்து
ஏடு எடுத்துப் படிக்கும்
மாணவர்களுக்கு
நல்ல வழி காட்டிடம்மா....

அவர்கள் வாழ்க்கையில்
பேனா முனையை மட்டுமே
கூராக்கி
எழுத்தில் தீட்ட வேண்டும்.....

என்றுமே கத்தி முனையை
நினைத்துக் கூட பார்க்கக்கூடாது....

கைகள் என்றும்
ஆக்கத்திற்கு மட்டுமே
பயன்பட வேண்டும்

பாடம் சொல்லித்தரும்
ஆசிரியரை கடவுளாய்
நினைத்துப் பார்க்க வேண்டும்
எமனாக நினைக்க கூடாது....

வன்முறைக்கு வழி இல்லாத
நல்ல சிந்தனை வேண்டும் அன்னையே...........

எழுதியவர் : சாந்தி (13-Oct-13, 11:32 pm)
Tanglish : kaikal endrum
பார்வை : 144

மேலே