வானம் நமக்கோர் மகுடம்

கவலை என்ற
கயிறால் கட்டுண்டு போகாதே
காற்றாய்ப் புறப்படு
என்னிலடங்காத எதிர்க்காலத்தை
காவியமாய் எழுத

கூண்டுப் பறவை
சிறகை விரித்தால்
குனிந்த முகங்கள்
நிமிர்ந்து சிரிக்கும்

கடிவாளத்தை தூர எரி
ஒருதிசை இலட்சியத்தை அடைய
மறவாதே மானிடனே
வானம் நமக்கோர்
மகுடம் வழங்கும்

உயர்ந்த லட்சியம்
உன்னுடையது
உயர்ந்த வாழ்வும்
உன்னுடையதே !


படித்ததில் பிடித்தது

எழுதியவர் : (10-Jan-11, 5:42 pm)
சேர்த்தது : Abinaya
பார்வை : 549

மேலே