உடல்காப்போம்! உயிர்காப்போம்!

நன்றாக இருக்கும்போது
அதன் அருமை புரியாது!
ஒரு முறையேனும்
நோய்வந்து சென்றால்தான்
நன்றாக இருப்பதன்
அருமை புரியும்!

ஒழுங்கான அளவோடு
உணவு எடுத்துக்கொண்டால்
வேம்பாக கசக்கும்
மருந்து எடுக்கவேண்டிய
அவசியம் இருக்காது!

தினந்தினம் சீராக
உடற்பயிற்சி செய்துவந்தால்
தொப்பைக்கும் கொழுப்புக்கும்
ஓடவேண்டி இருக்காது!

முடிந்த இடங்களுக்கு
நடந்தே செல்லலாம்
முடிந்த அளவோடு
உணவை நிறுத்தலாம்!
உடம்பை காத்து
உயிரினைக்காப்போம்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (17-Oct-13, 11:35 pm)
பார்வை : 175

மேலே