சாபம்

சாபம்

காகித பூக்களில் ஏமாந்த
தேனீயின் சாபமோ !

கருவிலேயே அழிக்கப்பட்ட
பெண் சிசுவின் கோபமோ !

மரங்களை வெட்டி மனிதக்கூடு செய்த
நம் பாவமோ !

கன்னத்தில் கை வைத்து வானம் பார்த்திருக்கிறாள்
கானத்தூர் கிழவி !

மழை பெய்தாலும்
நாற்றழுகி நிற்கிறது நம் சாபம்.

எழுதியவர் : செல்வா பாரதி (22-Oct-13, 6:45 pm)
Tanglish : saabam
பார்வை : 122

மேலே