சாபம்
சாபம்
காகித பூக்களில் ஏமாந்த
தேனீயின் சாபமோ !
கருவிலேயே அழிக்கப்பட்ட
பெண் சிசுவின் கோபமோ !
மரங்களை வெட்டி மனிதக்கூடு செய்த
நம் பாவமோ !
கன்னத்தில் கை வைத்து வானம் பார்த்திருக்கிறாள்
கானத்தூர் கிழவி !
மழை பெய்தாலும்
நாற்றழுகி நிற்கிறது நம் சாபம்.