வேண்டாம் வேண்டாம்

உன்னோடு வாழ்கின்ற
நிலை ஒன்று தோன்றாதோ?
அன்பே நீ சொல்லாயடி.
உன் மௌனத்தின் இடை தன்னில்
வார்த்தைக்கு தடுமாறும்
நிலைப்பாடு எனக்கேனடி?
உன் பூவிதழ் கன்னத்தில் நானும்
பருவாய் மாறிட வேண்டும்.
உன் புன்னகை விளம்பில் நானும்
உயிர் இறந்திட கூட தோன்றும்.
வேண்டாம் வேண்டாம் என்னை பார்க்காதே
உன் பார்வையினாலே உயிரை ஈர்க்காதே.

எழுதியவர் : கவிசதிஷ் (14-Jan-11, 10:53 am)
Tanglish : ventaam ventaam
பார்வை : 549

மேலே