என் நொடிகள்
![](https://eluthu.com/images/loading.gif)
என் அந்த நாட்கள்...
வேதணையும் கண்ணீரும் சேர்ந்தது
நான் வாய்ப்புகள் தேடியும் - எந்த
வாய்ப்பும் கிடைக்காமல் போன நொடிகள்
என் திறமையை -என்
உழைப்பை புதுமையை வெளிக்கொணர
இன்னும் அமையவில்லை எனக்கான நாட்கள்...
என் தேவைக்காக -இன்னும்
தந்தையை சார்ந்திருக்க
என் மனம் வேதனையை வெளியிடுகிறது....
எனக்கான வேலை எனக்கான வாய்ப்பு
எப்போது அமையும் என்ற வலிகளுடன்.....
மூ.முத்துச்செல்வி