My HOSTEL DAY CELEBRATION

நமது நான்காண்டின்
கையெழுத்து புத்தகம்
இந்த கவிதை...!
இதன் வார்த்தை என்னுடையது
வாழ்க்கை நம்முடையது

கிராமத்திற்குள்.....
குக்கிராமத்திற்குள் ஓர்
நகரம் இந்த கல்லூரி..... அந்த
நகரத்திற்குள் ஓர் சொர்க்கம்
எங்கள் விடுதி....!

அயல்நாட்டு ஆசையுள்ள
இவ்வூர் மக்கள்.... இந்த
கட்டிடங்களை அன்னாந்து பார்த்து
அவா தீர்த்து கொள்கின்றனர்…!

இக்கல்லூரி முதல்வர்
எங்கள் விடுதி தலைவர்......
காற்று பூக்களில்
தவழ்வது போல….. இவரது
கன்னங்கள் புன்னகைக்க
தவறியதில்லை…!

விடுதிகாப்பாளர்கள்...... இவர்களை
இந்தக் கூட்டத்தில்
விட்டுப்பாருங்கள்
அடையாளம் காண
உங்களுக்கு அரைநாள் வேண்டும்
தோற்றத்தால் அல்ல... இவர்கள்
தோழர்கள் என்பதால்.....!

இதயங்களை இணைக்கும்
உலகப்பொதுமொழி
இந்த விளையாட்டு...,
விடுதி என்றாலே உடன் வந்துவிடும்
மெல்ல வழிகேட்டு....!

விளையாட்டிற்கென்றே ஒருவிழா….
இது
என் நண்பர்கள் கொண்டாடும்
திருவிழா…!

இங்கே வந்த முதல்பொழுது என்
நாட்காட்டியில்
விடுமுறை நாட்களே விருப்பம்
இப்பொழுது என் நாட்களெல்லாம்
விடுதியிலே தான் இருக்கும்…!

மாணவனுக்கும் கல்லூரிக்கும்
இடைவேளை இந்த இரவு
கிடைத்த இடைவேளையெங்கும்
நிரம்பிவழியும்
நண்பன் என்ற உறவு…!

இக்காலத்தில்…..
சில்லறை சப்தங்களை விட
சிரிப்பு சப்தத்திற்குதான் பஞ்சம்
எங்கள் சிரிப்பொலிக்கு
இரவே இரவல் கேட்டு கெஞ்சும் …!

எதற்காக விழித்தோம்… எதற்காக
சிரித்தோம் …
என்றே தெரியவில்லை
இவையாவும் துக்கம் தொலைத்த
தூங்கா இரவுகள் …!

விடுதி துறந்த மாணவர்கள்………
இந்த கல்லூரிக் கிரிக்கெட்டில்
கல்லூரிக்கும் வீட்டிற்கும் ரன்கள்
எடுத்தே
ரணமாய் போகிறார்கள்….
எங்களுக்கோ கல்லூரியும் வீடும்
வேறுவேறு இல்லை
காலம் பற்றிய ஒரு வேதனையும்
இல்லை…!

இந்த காலத்தில்
ஒரே குடும்பமாயினும்
உணவுநேரம் என்பது வேறுவேறு…
ஒரே குடும்பமான எங்களுக்கு
உணவு நேரம் வேளை மாறாது ….!

இதே தொலைக்காட்சியை
வீட்டில் பார்க்கும் போது கார்கில்
யுத்தமே வெடிக்கும்… எங்கள்
விடுதியில் வெறும் சத்தம்
மட்டுமே கேட்கும்…!

சங்கீதத்தோடும் எங்கள்
சட்டைகளோடும்
சடுகுடு ஆடும்
சலவை இயந்திரம்…. எங்கள்
உடை அழுக்கை அதன்
உடலுக்குள் பூட்டிக் கொள்ளும்…!

புறாவிடுதூது…
இந்த நெரிசலில் இறக்கை விரிக்க
இடமேது…!
தபால் விடுதூது….
தபால்தலைகள் பல
தலைமறைவாகிவிடுகிறது…!
தோதான ஒரே தூது
மின்னஞ்சல் விடுதூது… இங்கே
தளமெங்கும் இணையதளம்
அது எங்கள் பக்கபலம்….!

ஒரே அறையில் இருந்து கொண்டு
உலகைச் சுற்றி வர வேண்டுமா
கையில் ஒரு புத்தகமும்
கடுகளவு கற்பனையும்
இருந்தாலே போதும்
உலக அறிவின் தூதகம்
எங்கள் விடுதி நூலகம்…!

அவசரமென்றால் அர்த்த சாமத்திலும்
அக்கறையாய் வரும் உதவி இது
விண்மீனுக்கடுத்து விடியல் வரை
விழித்திருக்கும் அவசர ஊர்தி அது…!

தனியறையென்ற வசதியுண்டு
அந்த அறைதான் தனிமையில்
வாடுகிறது
உடமைகளுக்கு மட்டும் உரித்தானது
உறங்கமட்டும் என்றானது…!

கல்லூரி எமக்கு வானம்
தந்திருக்கலாம்
விடுதி எமக்கு சிறகு தந்திருக்கலாம்
பறக்க கற்று கொடுத்தது என்னவோ
என் தோழர்களே…….

காந்தங்களில் துருவ
பாகுபாடு உண்டு
ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள
கல்லாரி நட்பில் எந்த பாகுபாடும்
இல்லை
இதயங்கள் இணைந்து கொள்ள......

கேலிவதை சட்டங்கள்
எங்களுக்கு தேவையில்லை
கேலி செய்வதுதான் எங்கள் நட்பின்
விதை

தேர்ச்சி பெற்ற ஆசிரியரின்
மூர்ச்சியடையச் செய்யும்
வகுப்புகள் கூட தோற்று போகும்
தேர்வின் முதல் நாள்
எங்கள் கூட்டுப்படிப்பு முன்னால்
……….!

என் நண்பர்களும்
ஆன்மீகவாதிகளே ……
கீதாசாரத்தை கிருஷ்ணருக்கு கற்றுக
ொடுத்தவர்களே இவர்கள்தான்
உதாரணம்….
இன்று எது உன்னுடையதோ
அது நாளை மற்றவனுடையது
எதை கொண்டு வந்தோம்
அதை இழப்பதற்கு……!

நட்சத்திரங்கள் இல்லாத வானம்…
என்
நண்பர்கள் இல்லாத இந்த வளாகம்
இரண்டுமே ஒன்றுதான்…!

நிலா உடைந்து போனாலும்
பாலைவனத்தில் பூக்கள்
பூத்தாலும்
தங்கம் விலை மெலிந்தே போனாலும்
நண்பர்கள் மாறுவதில்லை எங்கள்
நட்பு மறைவதுமில்லை….!

இந்ந
கவிதைக்கு முற்றுபுள்ளி வைக்க
என்னைப் போலவே என் பேனாவும்
தயங்குகிறது
இந்த கரவொலியோடு என்
கல்லூரி வாழ்க்கையும்
கரைந்துவிடப்போகிறதா…..இல்லை
நட்புக்கும் பிரிவிற்கும்
சம்பந்தமே இல்லை….!

மழைகொண்ட மேகங்கள் நாங்கள்
மேகங்களில் ஒன்றாய் இருந்தோம்….
இன்று
மழைதுளிகளாய் பிரியப் போகிறோம்
…. இருந்தாலும்

எங்கள் ஞாபகங்கள் மலை போல
காலம் கடக்கும் காற்று போல
காற்று மலையை கடந்து செல்லலா
ம்
கரைத்து விடுவதில்லை...!

தேடலுடன்
#தீபன்#

எழுதியவர் : Deepan (4-Nov-13, 2:36 pm)
சேர்த்தது : DEEPAN CHAKRAWARTHY
பார்வை : 1948

மேலே