காதல் கை கூடுமா

காதல் மிக அழகான சோலை.
நந்தவனம் ஒன்று வைத்தேன்.
அதில் நீயும் நானும் பூக்களே.
அன்பை தந்து அன்பை நேசி .
தினமும் கைதாகி சிறையில்
கம்பிக்குள் வாடும் கைதிகளுக்கு
விடுதலை ,விடுதலை ஏக்கமே .
எனக்கு உந்தன் அரவணைப்பே.
தினம் தினம் அன்பு சிறையே .

உந்தன் உள்ளம் அது மிக ஆழம் .
பலதும் ஆறியாதவள் நானோ .
காதலை தந்து காட்சிகள் தந்து.
என் உள்ளம் புரியாதவனோ.
எந்தன் காதல் மலர்ந்த பூத்த பூவே .
என்னை வெறுக்கும் உந்தன் இதயம்.
சக்கரம் பாதையில் தான் போகுமா .
இல்லை நொறுங்கித்தான் போகுமா .

உந்தன் இதயத்தில் குடி இருப்பவள் நானே.
இருந்தும் என் இதயத்தில் வலிகள் பல பல .
அன்று உன் அழகை நான் ரசிக்க வில்லை .
அன்று உன்னை பிடித்தது உந்தன் உள்ளம் .
இன்றும் உன்னை பிடிக்கும் நீ என் காதலன் .
காற்றுக்கு கூட இடைவெளி இருக்காலாமே.
நம் காதலுக்கு இடைவெளிகள் இல்லையே.

யாரும் அறிந்திடா பல வண்ணம் கொண்டே .
காதலன் உன்னை நிமிடங்கள் தோறும் நேசிப்பேன்.
காலங்களை நோக்கி நானும் காத்து இருப்பேன் .
உந்தன் வருகைக்காக கரம் நீட்டி காத்திருக்கிறேன்.
எந்தன் அன்பினால் சொல்வதை ஏற்காதவனே.
நான் உன்னுடன் வாழும் இனிய காலம் முழுவதும்
உந்தன் அன்பு சிறையில் தான் நான் வாழ்வேனா
இல்லை தினம் தினம் வாடித்தான் போவேனா .

எழுதியவர் : (8-Nov-13, 7:20 pm)
சேர்த்தது : தமிழ் அழகி.
பார்வை : 108

மேலே