மரணம் வரை காத்திருக்கும் எந்தன் நெஞ்சம்

விடை தெரியா வினாக்களாக எம் பயணம் –அதில்
வீணர்களின் கூச்சல்கள் சில நிமிடம்
விளையாட்டு பொம்மைகளாய் கருதி எங்கள்
விசும்பல்களை ரசிக்கிறது உலகம் இன்றும்
முதலைகளின் கண்ணீரை நம்பி நம்பி
முட்டாள்கள் ஆகிவிட்டோம் அன்றும் இன்றும்
வசந்தத்தின் வருகைக்காய் காத்திருந்து
வயது ஏறிப் போனது தான் மிச்சம்
மலர்ந்திடும் எமக்கொரு விடிவு என்று
மரணம் வரை காத்திருக்கும் எந்தன் நெஞ்சம்

எழுதியவர் : Dinesh (17-Nov-13, 10:16 pm)
பார்வை : 277

மேலே