பிள்ளை செல்வம்

பிள்ளைகளின் கூட்டம்
சாலையை கடக்க முன்னோட்டம்
வண்டியில் நான் - கண்ணத்தில்
கைகளோடு சோகத்தில்

காலத்தை நகர்த்தினேன்
இறுக்கமான இதயத்தோடு
தீராத துக்கம் மனதோடு
கேட்காத வார்த்தைகள் காதோடு

பிள்ளை பேரு பெற்று
வாழ்ந்திடவே வாழ்த்துக்கள் பெற்றோம்
வாழ்கிறோம் வாழ்த்துக்கள் தான்
இன்னும் வரவில்லை

காணிக்கையை இறைவனிடம்
சமர்பித்தோம்
கட்டணத்தை வைத்தியனிடம்
வைத்துவிட்டோம்

நல்லதோர் செய்தி சொல்
தொலைபேசியில் அம்மாவின்
அன்பான கேள்விக்கு
செய்தி தான் கிடைக்கவில்லை

அப்தம் எட்டு தாண்டிவிட்டோம்
சத்தம் மட்டும் இன்னுமில்லை
கண்களோடு அவள் அழுகிறாள்
மனதோடு நான் அழுகிறேன்

கர்மங்களை கலைக்க
பரிகாரங்கள் சொல்லுங்கள்
பாவங்களை போக்க
போதகம் பண்ணுங்கள்.

உன் வரவுக்காக ஏங்கும்
எங்கள் ஏக்கம் நிற்காது
உனக்காக எங்கள்
கண்ணீரும் நிற்காது

பிள்ளைக்காக ஏங்கும் வருங்கால பெற்றோர்கள்

எழுதியவர் : சிவா (20-Nov-13, 3:01 am)
Tanglish : pillai selvam
பார்வை : 424

மேலே