நான் பார்த்தவள்
நான் பார்த்தவள் ....
பருவம் தொட்ட வயது எனக்கு......
பார்வையில் என்னை தொட்ட பருவம் அவளுக்கு ...
கண்களில் தோன்றுவது காதல்....
கண்டேன் காதலை அவள் கண்களில் ...
உன் பார்வை பட்டதும் ......
பறந்து சென்றது என் இதயம்....
பூ சிரித்து நான் கண்டதில்லை ..
காணவும் விரும்பவில்லை .....
என்னவளின் சிரிப்பில் என்னை தொலைத்ததால் ....
பிறந்த குழந்தை பாதம் தொட்டதில்லை....
தொடவும் விரும்பவில்லை ...
என்னவள் சிவந்த பாதம் கண்டதால் ....
சிப்பிக்குள் முத்து கண்டதில்லை...
தெரிந்துகொள்ள விருப்பம் இல்லை ...
என்னவளின் சிவந்த வாயின் முத்தை கண்டதால் ..
கார்மேகம் அசைவதை கண்டதில்லை...
காணவும் பிடிக்கவில்லை ...
என்னவளின் கார்மேக கூந்தல் அசைந்ததால் ...
வானம் சிவந்து கண்டதில்லை....
காணவும் விருப்பமில்லை ...
என்னவளின் சிவந்த முகத்தை கண்டதால் ....
தென்றல் வீசுவதை உணர்ததில்லை..
உணரவும் விரும்பவில்லை ..
என்னவள் விரல்கள் தீண்டுவதை கண்டதால் ...
அன்னம் நடப்பதை கண்டதில்லை ..
காணவும் விருப்பமில்லை...
என்னவளின் அழகிய நடையை கண்டதால்..
கிளிகள் பேசுவதை கவனித்ததில்லை ..
கவனிக்கவும் விரும்பவில்லை ..
என்னவளின் இனிமையான வார்த்தை காதில் விழுந்ததால் .....
மெல்லிசையை கேட்டதில்லை ..
கேட்க்கவும் விரும்பவில்லை ...
என்னவளின் இன்னிசையான குரலை கேட்டபின்னால்.....
மயிலின் அடக்கத்தை பார்த்ததில்லை ..
பார்க்கவும் விரும்பவில்லை...
என்னவளின் அடக்கத்திற்கு முன்னாள்..
குழந்தையை கொஞ்சியதில்லை ..
கொஞ்சவும் தயாராக இல்லை...
அவள் கொஞ்சும் அழகை பார்த்தால்...
கருணை கடல் அவள் ....
எறும்பின் சுறுசுறுப்பு அவள்...
அன்னத்தின் தூய்மை அவள்...
எல்லோருக்கும் பிடித்தவள் அவள்...
என் இதயத்தில் குடிகொண்டிருப்பவள் அவள்...
பொன்மானே ....
உன்னை பாடாமல் இருக்க முடியவில்லை ...
உன்னை பற்றி பாட வார்த்தைகள் போதவில்லை...
உயிரில் கலந்தவளே...
என் உள்ளத்தை துளைத்தவளே....
இறுதிநாள் உன் மடியில் வேண்டும்..
என் அடுத்த பிறவியிலும் நீ எனக்காக வேண்டும்...
கண்ணுக்குள் உன்னை வைத்திருக்கும்..
உன் காதலன்.. என்றும் உன் காவலன்.....