தெருமுனை தாண்டிய உருவம்
இருட்டுக்கு பாதை போடும்
பௌர்ணமியாய் ,
முன் ஜென்ம பந்தமாய் ,
எனக்கேற்ற சொந்தமாய்
சோகம் தீர்க்கும் சொர்க்கமாய்
வந்தால் அவள்...
மனச்சோலையில்
இன்று மட்டும் ஏனோ
இத்தனை வண்ணப்பூச்சிகள்
அவள் பார்வை பட்டதாலா!..
தேவதையாய் வந்தவள்
தேவையை நிறைவேற்றியவளாய் தெரிந்தாள்..
அற்பமான வாழ்வை அற்புதமாக்கியவள்
வளர்பிறையை எனக்குத் தந்து
தேய்பிறையை தனக்குத் தேடிக் கொண்டாள்..
வருவாளென்று
தெருவைப் பார்த்தபடி நான்,
தெருமுனை தாண்டிய உருவமாய் அவள்...