சரித்திரம் எழுது

சரித்திரம் படிப்பவனாக இருக்காதே ,
சரித்திரம் படைப்பவனாய் இரு !
சாயங்கால நேரத்தில்
சாதம் வடிக்கும் ,உன் தாய்க்கு
சந்தோசம் - நீ படைக்கும்
சரித்திரத்தில் தான் தவிர - நீ படிக்கும்
சரித்திரத்தில் இல்லை .
சந்தர்ப்பம் வருமென
சாந்தமாய் இருக்காதே - நீ
சந்திக்கும் நேரங்களை
சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்.
சரித்திரம் படைப்பவனுக்கு
சறுக்கல்களில் சந்தர்பத்தை பார்க்கிறான் . ஆனால்
சரித்திரம் படிப்பவனுக்கு
சறுக்கல்களில் சாவை பார்க்கிறான் .
சாகும் தருவாயிலும்
சரித்திரம் படைப்பாய் நீ நம்பினால்!
சரித்திரம் படிப்பவனுக்கு ஒரு நாள் சாவு
சரித்திரம் படைப்பவனுக்கு பிறப்பு ஒன்றே !!
சரித்திரத்தின் வாள்முனையில்
நீ இல்லை என்றாலும் ,
சரித்திரத்தின் வால்முனையில்
நீ இருக்க வேண்டும் .