பட்டாம்பூச்சி 1

ஒரு வயலில் ஒரு பட்டாம்பூச்சி அழகா பறந்து விளையாடுசாம்...அந்த பட்டாம்பூச்சி பார்க்க அவ்ளோ அழகாம்......

அந்த வழிய போன நத்தை பட்டாம்பூச்சியின் அழகில் மயங்கியதாம் .....

நத்தை அந்த பட்டாம்பூச்சியை பாத்து " நீ ரொம்ப அழகா இருக்க .....ஆனா ஏன் பறந்து கஷ்ட படற...வேணுனா என் முதுகுல எறிக்கோ....நா பத்தரமா நீ போக வேண்டிய இடத்துக்கு கூட்டிட்டு போறன்னு சொல்லிச்சாம் ....

உடனே பட்டாம்பூச்சி சொல்லிச்சம் "நா உன்ன ஏற்கனவே ஒரு வாட்டி பாத்து உதவி கேட்டேன் .நீ செய்யல ..இப்ப மட்டும் ஏன் கிட்ட பேசறன்னு ....

நத்தை எப்பனு கேட்டு முழிச்சிசாம்.......

அதற்க்கு பட்டாம்பூச்சி ..."நா பூழுவா(சுழற்சியின் முன் நிலை ) இருந்தப்ப என்னால நகர முடியாம அவஸ்த பட்டேன் ......அப்ப அந்த வழிய வந்த உன்ன பாத்து உதவி கேட்டேன் .என்னை அருவருப்பா பாத்துட்டு போய்ட்ட .....என்னால இப்ப நல்லா பறக்க முடியும் ...இப்ப நீயே உதவ வந்திருக்க .....:"
அப்பனா அழகா இருந்தா தான் உதவி பண்ணுவியா?.வேகமா கேட்டது ...

நத்தை தலை குனிந்தது ....

உதவி தேவ படும்போது செஞ்சா தான் அது உதவி....வேண்டாத போது செஞ்சா அது தொல்லை ..என்னை தொல்ல பண்ணாதன்னு சொல்லி பட்டாம்பூச்சி பறந்து போச்சு ....

நத்தை தவறை உணர்ந்தது .....

எழுதியவர் : ஸ்ரீமதி வடிவேலன் (25-Nov-13, 7:19 pm)
பார்வை : 222

மேலே