பெண்ணே நீ மாறிவிடு
வஞ்சனை செய்யும்
துஷ்டரைக் கண்டால்
நெருப்பாக மாறிவிடு....!
கபடமில்லா மொழி பேசும்
சிறு குழந்தை முன்
பூவாக மாறி விடு............!
விலகி விலகிப் போக
விட்டு விடாது
தொடர்ந்து வந்தால்
வெட்டிச் சாய்த்துவிடு வீணரை..!
பொறுமைக்கும் எல்லையுண்டு
மிதித்து ஏறி உயர முயன்றால்
வேரோடு சாய்த்துவிடு
கயமை கொண்ட மனிதரை .....!!