குழந்தைகள்

பருவப் பார்வைகளின்
பரிசுகள்.

நீண்ட இரவுகளின்
விடியல்கள்.

கட்டில் கலவரத்தின்
தொட்டில் சமத்துவங்கள்.

தரையில் நடைபழகும்
தங்கத் தேர்கள்.

இருட்டுக்குள் கருக்கொண்ட
நட்சத்திரங்கள்.

பெண்மைக்குத் தாய்மையளித்த
சந்ததிச் சூரியன்கள்.

சிரிப்பு பூக்கள் தூவும்
தேவதைகள்.

சிணுங்கி அழுது சிரிக்கும்
சித்திரங்கள்.

இடுப்பு பல்லக்கிலேறும்
இறைவன்கள்.

இல்லற வனத்தின்
இனிய வசந்தங்கள்.

மனிதனைத் தெய்வமாக்கும்
மகத்துவங்கள்.


- கவிஞர் செல்வா
காரியாபட்டி.


.



எழுதியவர் : கவிஞர் செல்வா (26-Jan-11, 1:35 pm)
சேர்த்தது : kavingarselvaa
பார்வை : 458

மேலே