நட்புக்கு ஒரு வினா

உள்ளார்ந்த எண்ணங்களை
உயிர்ப்புடன் பகிர்ந்து கொள்ள
உதவியாய் வந்த நட்பே,
ஆரவாரமாய் நுழைந்து உன்னை
ஆக்கிரமித்துக்கொண்டது காதல்
துக்கம் விரட்டிய உன் தோள்களும்
கண்ணீர் துடைத்த வார்த்தைகளும்
தூரமாகிப்போனது ஏனோ....
அமைதியாய்ப் புலம்பியபடி
வேடிக்கை பார்கிறது என் மனம்...

எழுதியவர் : சஹானா (4-Dec-13, 5:03 pm)
Tanglish : natpukku oru vinaa
பார்வை : 94

மேலே