ஒரு எழுதுகோலின் புலம்பல்

புதுப்பேனா அவனையே
உற்றுப் பார்த்தது...
தன்னைப் பிடித்து
என்ன எழுதப்போகிறான்
என ஆவலாய்...

அவன் எதையுமே
எழுதவில்லை...
கிறுக்கிவிட்டு அதே
இடத்தில் மீண்டும்
வைத்துவிட்டான்...

எதையுமே எழுதாமல்
அதன் உதிரம்
வீணாணதைக் கண்டு
வருந்தியது பேனா...!

எழுதியவர் : muhammadghouse (7-Dec-13, 7:37 pm)
பார்வை : 157

மேலே