ஒரு எழுதுகோலின் புலம்பல்
புதுப்பேனா அவனையே
உற்றுப் பார்த்தது...
தன்னைப் பிடித்து
என்ன எழுதப்போகிறான்
என ஆவலாய்...
அவன் எதையுமே
எழுதவில்லை...
கிறுக்கிவிட்டு அதே
இடத்தில் மீண்டும்
வைத்துவிட்டான்...
எதையுமே எழுதாமல்
அதன் உதிரம்
வீணாணதைக் கண்டு
வருந்தியது பேனா...!