மனதில் உறுதி வேண்டும்

வாக்கினில் இனிமை வேண்டாம்
துன்பம் தீர்க்கும் பெண்மை வேண்டாம்
வானமழை வேண்டாம் வண்ணமயில் வேண்டாம்
வெண்ணிலவு வேண்டாம் மேவுகடல் வேண்டாம்
பண்ணுசுதி வேண்டாம் பாட்டினிமை வேண்டாம்
பட்டு கருநீல புடவை வேண்டாம்
பதித்த நல்வயிரம் வேண்டாம்
சின்னஞ்சிறு குருவி போலே நான்
திரிந்து பறந்து வர வேண்டாம்
வண்ணப் பறவைகள் கண்டு நான்
மனதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம்
பெண்மை வாழ்கவென்று கூத்திட வேண்டாம்
விடியும் நல்லொளி காணுதல் வேண்டாம்...

தீராத சுமைகள் வேண்டும்
ஆறாத காயங்கள் வேண்டும்
மறையாத வடுக்கள் வேண்டும்
மறைத்து வைக்க கண்ணீர் வேண்டும்
தீபம் ஏற்ற அது அணைதல் வேண்டும்
தீயென சுடும் கேலிகள் வேண்டும்
பதில் சொல்லும் மௌனங்கள் வேண்டும்
பதிலில்லா கேள்விகள் வேண்டும்
ஆளத் துடிக்கும் ஆண்மை வேண்டும்
வலித்து எரியும் கண்கள் வேண்டும்
சொல்ல முடியாத சொற்கள் வேண்டும்
சொல்லிப் புரியாத சோகங்கள் வேண்டும்
ஒற்றை வரம் தருவாய்
பராசக்தி...

மனதில் உறுதி வேண்டும் !!!

எழுதியவர் : யுவபாரதி (12-Dec-13, 10:58 am)
பார்வை : 383

மேலே