பேராசைக்காரன்

விலகவும் மனமில்லை ..
தனித்து வாழவும்
தெரியவில்லை ....
திசை மாறிய
படகாய்..
என் மனம்...
கரை சேர்க்க
வாராயோ ...?
கண்ணே.......!
மீட்டெடு
மீண்டெழ முயன்று
தோற்ற என்னை ........
தாமதியாதே !
சந்தோஷ கணங்களை
சாகடிக்காதே ...
உன்னுள் நுழைந்த
என் வாசத்தை
வசப்படுத்து .

இப்படிக்கு,
தேக உரசலில்
சொர்கத்தை விரும்பும்

பேராசைக்காரன் ...........!

எழுதியவர் : வில்லியனூர் இராஜ கருணாகர (4-Feb-11, 5:26 pm)
பார்வை : 313

மேலே