என்னவள்

நான் பார்க்கும்
இடங்களிலெல்லாம்
நீ இருக்கின்றாய்,
நான் கேட்கும்
ஒலிகளிலெல்லாம்
நீ சிரிக்கின்றாய்,
என் இரவில் நிலவாகவும்....
என் பகலில் ஒளியாகவும்....
என் கவிதையில் கனவாகவும்....
இருக்கின்றாய்,
சமயங்களில்
நானாகவும்
இருக்கின்றாய்,
இப்படி....
எல்லாமுமாக
நீ
இருப்பதால்....
நான்
நானாக இருப்பதில்லை
எப்போதும்.

எழுதியவர் : (4-Feb-11, 5:33 pm)
சேர்த்தது : kathirsekar
Tanglish : ennaval
பார்வை : 363

மேலே