யாரைச் சொல்வது குற்றம்

இனிப்பும் ,புளிப்பும்,
காரமும், துவர்ப்பும்
ஒரு ங்கே அமைந்தால்
பண்டம் தேடி வெளியே
அலையப் போவதில்லை .

இனிமையும், இயல்பும்
தன்மையும் தாக்கமும்
ஒரு சேரப் பெற்றால்
துணை தேடி வெளியே
அலையப் போவதில்லை.

இருக்கவேண்டியது இருந்தால்
இருக்கும் இடத்தில் இருந்தால்
அலைபாய வேண்டியதில்லை
அலை மோதத் தேவை இல்லை
நிலை மாறப் போவதில்லை .


இல்லாமல் போனதில்லானாலே
ஏதும் அணுக முடியாதானாலே
எதுவும் கிடைக்காதானாலே
வெளியே போகும் எண்ணம் வந்திடும்
யாரைச் சொல்வது குற்றம் ?
அலைவதையா, இறுகினதையா !

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (24-Jan-14, 8:52 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 656

மேலே