மண்டியிடுகிறான் ஹிந்தியத்திடம்

மீத்தேனெடுக்க அலைகிறதொரு கூட்டம்...

மின்சாரமெடுக்க அணுவைப் பிளக்கிறதொரு கூட்டம்...

மீனவனை விடாமல் வீழ்த்துகிறதொரு கூட்டம்...

கச்சத்தீவு இலங்கைக்கேவென கோஷிக்கிறதொரு கூட்டம்...

காவிரியில் பங்கில்லையென்று புன்னகைக்கிறதொரு கூட்டம்...

கட்சிகளெல்லாம் கபட நாடகத்தில் கதாப்பாத்திரங்களாக.....

நாயகனும்-

நாயகியும்... கடிதமெழுதியே காலந்தள்ள
மானமும் வீரமும் உயிரென்றிருந்த தமிழன்-

இன்று

மண்டியிடுகிறான் "ஹிந்தி"யத்திடம்.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Jan-14, 4:26 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 33

மேலே