நானும் நட்பும் ...

நட்பே !
நீ கரையாத உருவம்
நான் மறையாத பருவம் !
நான் வேரானால்
நீ முளையின் நீராவாய் !

நான் மழையானால்
நீ மழையின் முகிலாவை !
நான் சுவையானால்
நீ சுவையின் உணர்வாவாய் !
நான் தாயானால்
நீ தாயின் கருவாவாய் !
நான் அன்பானால்
நீ அன்பின் உருவாவாய் !
நான் மலரானால்
நீ மலரின் மணமாவாய் !
நான் புதிரானால்
நீ புதிரின் விடையாவாய் !
நான் நட்பானால்
நீ நட்பின் உயிராவாய் !

ஓடி விளையாடும் பிள்ளையானாலும் ,
கூனிக்குறுகும் முதியவனானாலும் ,
என் நட்பே !
நீ என்றும் மறையாத இன்பம்
வாழ்வின் துயரை நீக்கும் பேரின்பம் .......


எழுதியவர் : வினையா (8-Feb-11, 8:00 pm)
சேர்த்தது : Abinaya
பார்வை : 763

மேலே