மேய்ப்பனை மறந்த மந்தைகள்

தன் பிள்ளையின் நினைவலைகள்
ஒலிக்கிறது முதியோர் இல்லமெங்கும்
அவன் நினைவலைகளோ
ஒலிக்கிறது அவன் இல்லமெங்கும்
அன்பை தந்த அன்னையை
தள்ளி வைத்து என்ன சாதிக்கபோகிறானோ...?
அறிவை வளர்த்த தந்தையை
ஒதுக்கிவைத்து என்ன கிழிக்கபோகிறானோ...?
அவர்களின் ஒவ்வொரு துளி கண்ணீரிலும்
அந்த பாவி செய்த சில புண்ணியங்கள் துளிர்விடுகின்றன
உண்ணும் போதும் கூட
அவன் உண்டிருப்பானோ? என்று
அந்த பாவிக்காக
அவர்கள் உள்ளம் வாடுகிறது
மீண்டும் வந்து விடு பாவியே...!
அவர்களை அழைத்துச்செல்ல
உன் பாவத்துக்கு
மோசம் தேடி கொள்ள..
இல்லையெனில் அவர்களின்
மன சாவுக்கு நீ காரணமாகி விடுவாய்...!
-ஹரிகரன்

எழுதியவர் : ஹரிகரன் (1-Feb-14, 2:19 pm)
சேர்த்தது : ஹரிகரன்
பார்வை : 842

மேலே