எதனால்

கற்கண்டு கசந்தது பித்தத்தால் !
கன்னம் சிவந்தது முத்தத்தால் !

கல்வி சிறந்தது வித்தத்தால் !
கடவுள் உணர்ந்தது சித்தத்தால் !

கலகம் எழுந்தது யுத்தத்தால் !
கனவு கலைந்தது சத்தத்தால் !

கவலை அகன்றது சொந்தத்தால் !
கலக்கம் தெளிந்தது பந்தத்தால் !

கடமை மறந்தது மந்தத்தால் !
கவிதை பிறந்தது சந்தத்தால் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Feb-14, 11:52 pm)
பார்வை : 95

மேலே