அந்த ஒரு நாள்

கடற்கரை மணல்
கால் பதித்த அவள்
கை கோர்த்த நான்

நிலா மகள்
நிலவோடு
நானும் அவளின்
நிழலோடு

சேலை சென்ற வழி
சோலையாகி வர
சொர்க்கம் திறந்து விடுதோ

பஞ்சு மிட்டாய்
பிஞ்சு விரல்
நெஞ்சம் கொண்ட சுவை

வேடிக்கை பார்க்கும் மக்கள்
விழி பார்த்த நான்
விழி கோர்த்த அவள்
நாணம் கொண்ட நாணல்

தாமரை குளம்
மேனகை குளியல்
கண் கொத்திய மீன்கள்

மழை சிந்திய மௌனம்
மயிலிடை நடனம்
அவள் மீட்டிய ராகம்

தேன் நின்ற இதழ்
தேகம் தேடுதடி - அதன்
தாகம் கூடுதடி

ஊடல் கொண்ட விழிகள்
உணர்ச்சி பெருக்கெடுத்த உதடுகள்
ஆறுதலாய் கண்ணீர் துளிகள்

உணவு விடுதி
மடியில் அமர்வதை
மாற்றியமைத்த நாற்காலி

வகிடெடுத்த வாழை இலை
இலை தழுவிய விரல்கள்
விரல் ஒழுகிய பருக்கை
அமிர்தம் சுமந்த எறும்பு

அரசி பேருந்து
அவள் அரியணை ஏறியதால்
அரசனாக்கியது அவள் -அருகில் அமர்ந்ததால்

தூங்கிய விழிகள்
தூங்காத புன்னகை
தாங்கிய நான்

பேருந்து நிறுத்தம்
பிரிவின் ஆரம்பம்
கை குலுக்கிய கரங்கள்
விடை கொடுத்த விழிகள்
சீறுகின்ற நினைவுகள்
சிறகொடிந்த பறவைகள் ............

எழுதியவர் : தினேஷ் sparrow (14-Feb-14, 7:34 pm)
பார்வை : 160

மேலே