வலையைப் போட்டே

பூஞ்சிட்டுக் குருவிகளை பார்த்த தில்லை
பொன் அந்தி வான்பார்க்க பொழுதுமில்லை
மாஞ்சோலை கிளிதேடிப் போன தில்லை
மான் துள்ளல்! முயல் தாவல் கண்டதில்லை
தேன்சிந்தும் தேனடையை! பட்டாம் பூச்சி
சிறகசைவை ரசித்திடவும் நேரமில்லை
நான்சென்று தேடி இவை தளத்தில் சேர்ப்பேன்
நாள்தோறும் மடிக்கணிணி வலையைப் போட்டே!

எழுதியவர் : சு.அய்யப்பன் (16-Feb-14, 10:20 am)
பார்வை : 95

மேலே