உலகின் சப்தம் நிசப்தமாகும் நேரம்...!

உலகின் சப்தம் நிசப்தமாகும் நேரம்...!

இருள் விழுங்கிய அறையில்..

தாழிடா கதவின் இடையே,கதிரவனின் ஒளி அழகாய்

மெல்லிய கோடை வரைந்துகொண்டிருந்த நேரம்

சில்லிட்ட தரையின் அடைக்கலத்தில் கிடந்த கிழிந்த பாய்,



அதில் கிடைத்த பட்டவன்...

அருகே தண்ணீர் குவளை, அதன் அடிபகுதியை

வருடியபடி சற்றே தவழும் தண்ணீர்,அதை

சுற்றி சிந்திய நீர் துளிகள், அதை பார்க்க ?

சற்றுமுன்பு குடித்தது தெளிவாய் தெரிய



கிடந்தவன் தூங்கவில்லை..!!

கடனாக கூட கண்களுக்கு வரவில்லை தூக்கம்,

இருத்தும் கண்கள் மூடியபடி..??



நிமிர்த்து கிடக்க, வெளியேறும் மூச்சு காற்றால்..

மேலும்,கிளுமாக உஞ்சலாடும் ஒட்டிய வயிறு,

வெறும் வயிற்றின் எடை தாளாமல் திரும்பிகொண்டான்

கவிழ்த்தபடி, ஒட்டிய வயிறும் தரையும் அழுத்தமான

முத்தத்துடன் இணைந்துகொண்டன இருக்கமாய்..!



உலகின் சப்தம் அனைத்தும் நிசப்தமாக..!!

அவன் வயிறு இடும் ஓலம் மட்டும்

தெளிவாய் கேட்டன..!!

மனதில் பல்லாயிரம் கேள்விகள் நகர்துகொண்டிருக்க

அவன் தேடிய ஒரே பதில்..?

எப்போது வேலை கிடைக்கும் என்பதை விட ,

உணவு எப்போது கிடைக்கும்..!!



அவன் அமைதி எல்லை தாண்டும் நேரம்,

வீரிட்டு அழ தோன்றும் நேரம்,

மூடிய கண்களின் ஓரங்களில் கண்ணிர் துளிகள்

வெளிவர காத்திருக்கும் நேரம்.,



கதவு திறக்க,கதிரவனின் மெல்லிய கோடு கரைந்து

அரை எங்கும் பரவியது வெளிச்சம்.,

அரை தோழன் வந்துகொண்டிருந்தான்

கைகளில் ரொட்டி துண்டுகளோடு..!

நண்பா..

எனக்கு பேக்கரியில் வேலை கிடைத்திருக்கிறது

என்று சொல்லியபடியே...!!!




எழுதியவர் : இன்பா (13-Feb-11, 12:49 am)
சேர்த்தது : Inbhaa..
பார்வை : 377

மேலே