ஏக்கம்
ஏங்கிப் போன உணர்வுகளில்
மயங்கிப் போனது இளமை
அதில்
தேங்கி நிற்கும் உன்
பிம்பம்
என்னை செயல் உருவில்
தரப்போகும்
நிழல் உருவே
எனக்காக பிறந்திருக்கும்
வண்ண உருவே
உன்
தங்க உருவத்தை
எங்கே
ஒழித்து வைத்திருக்கிறாய்
நான்!..
நாம் ஆக காலத்துக்கேன்
பொறாமை
நான் உன்னை
கானுமட்டும்
நீ
என்னை சேருமட்டும்
என்
கனவுகள் என்றும்
மனைவியாய்
உணர்வுகளின்
துணைவியாய்.............