கண்டேன் சிவனை வென்றேன் எமனை

ராவணன் பிறந்த மண்ணில் நேர்ந்தது அநியாயம் !
ராமன் வாழ்ந்த மண்ணில் கிடைத்தது நியாயம் !!

பல்லாண்டு கழிந்தன வாழ்வு சிறையறையில் ! உங்களுக்கு
பத்து மாதம் மட்டும் நிம்மதி ! கருவறையில் !!

முருகன் ! சாந்தன் ! பேரறிவாளனுக்கு தூக்கு!
என் அப்பன் முருகனுக்கும் அப்பன் தந்தான் நியாயமான தீர்ப்பு!

பேரறிவாளா !
பேட்டரி வாங்கி தந்தது ஓர் சாக்கு! அதனால்
தீர்ப்பு என்ற பெயரில் வந்தது உங்களுக்கு தூக்கு !

பத்து மாதம் கருவை சுமக்கும் அற்புதமே அம்மா!!
23 ஆண்டுகள் வலியை சுமந்தாயே என் அற்புதம்மா !

இலைகள் தழைத்து உதிரும் ! இன்று
இலையால் மரித்த உயிர்கள் மலரும்!

முப்பூசை செயினும் கிடைக்காது சிவன் தரிசனம்! சதாசிவனே !
உன் ஒரு தீர்ப்பு வரலாற்றின் தீர்க்க தரிசனம் !

உயிர் எடுப்பவன் பரமசிவன் ! நீ உயிர் கொடுத்த சதாசிவன் !!!
கங்கை முடி கொண்ட சிவனே ! எங்கள் சேலம் பவானி தாய் பெற்ற மகனே!!!

தமிழன்பன் .ரா.கணேஷ் , சேலம்.
அலைபேசி : 98420 43939

எழுதியவர் : ரா. கணேஷ் (28-Feb-14, 6:08 pm)
சேர்த்தது : ganeshrajmca
பார்வை : 105

மேலே