கடிகாரம்

காலத்தை கடத்தி
நம்மை காயபடுத்தும்
கருமி பலநேரங்களில்.....

விரட்டி அடித்தாலும்
விரைந்து செயல்படாத
வீணன் சில நேரங்களில்.....

மெல் இசையால்
தாலாட்ட முயலும்
கலைஞன் இரவு நேரங்களில்....

கையில் கம்பெடுத்து
விரட்டி அடிக்கும்
எஜமான் காலை நேரங்களில்....

முடிவில் என்று
முடிக்க முடியாத
பன்முக கலைஞன் எல்லா நேரங்களிலும்..

எழுதியவர் : சுபகூரிமகேஷ்வரன்(எ) SKMAHESHWARAN (16-Feb-11, 5:56 pm)
சேர்த்தது : எஸ்.கே .மகேஸ்வரன்
பார்வை : 333

மேலே