நீ என்றும் வேண்டும் !

நீ ஏற்படுத்திய காயம்
என் மனதில் வடுவாய் வேண்டும்...
ஏனெனில் ...
மீண்டும் காயப்படாமல் இருப்பதற்கு!

நீ ஏற்படுத்திய கண்ணீர்
என்றும் என் நினைவில் வேண்டும்..
ஏனெனில் ..
மீண்டும் கானல் நீரை கண்ணீர் என
கண்டு ஏமாறாமல் இருப்பதற்ககு !

நீ ஏற்படுத்திய புயல்
என்றும் என் உணர்வில் வேண்டும் ..
ஏனெனில் ..
மீண்டும் புயலை தென்றல் என
உணர்ந்து ஏமாறாமல் இருபதற்ககு !

எழுதியவர் : ஸ்ரீமதி வடிவேலன் (16-Feb-11, 5:21 pm)
சேர்த்தது : srimathi vadivelan
பார்வை : 491

மேலே