மூஞ்சிப்புத்தகம் FACEBOOK

பாடம் படிக்க வேண்டிய
மாணவன் புத்தகம்
திறப்பதை காட்டிலும்...

அவனது கைபேசியில்,
கணனியில் முகபுத்தக
கணக்கக்கினை தவறாது
திறந்து விடுகிறான்...

சிலேடு, புத்தகம் என
தூக்காத கைகளும்
கைபேசி வழியே
முகப்புத்தகம் சுமந்ததாய்
செல்கிறது...

நட்பு

கண்டு வியந்த
காட்சியையும்,
சிரித்து மகிழ்ந்த
நகைச்சுவையும்...

உள்ளம் உணர்ந்த
எண்ணங்களையும்,
உணர்ச்சிகளையும்,
அனுபவங்களையும்,
கருத்துக்களையும்,
ஆக்கங்களையும்,

இங்கே சித்திரமாய்
வரைகிறார்கள்...
பகிருகிறார்கள்...

நண்பர்கள் அவர்களது
சுவற்றிலே...

முகநூலில் முகம்
புதைத்து கிடக்கிறது.
நட்பு வட்டாரங்கள்...

நண்பர்களின் கூட்டம்,
பட்டியல் கூட நீண்டு
கொண்டுதான் செல்கிறது...

காதல்

சில போலிக்
கணக்குகள்
சில தவறான
பயன்பாடுகள்

அப்பாவிகளின் உயிரையும்
காவு கொள்கிறது...

முகம் காணாத நட்பு
கொஞ்ச நாட்களில்
முகநூல் காதலாக
மலர்கிறது...

முகப்புத்தக
அரட்டையில்
அடுத்ததாக நீ...

என்ன சொல்வாய்
என்ன கேட்பாய்
என்ற அரட்டை
எதிர்பார்ப்புகள்...

சில காரணங்களினால்
ஏற்படும்,
தோல்விகள்...
பிரிவுகள்...
வலிகள்...

எஞ்சி இருப்பது
கடவுச்சொல்லாக
பயன்படுத்திய
அவ(ன்)ள் உடைய
பெயர் மாத்திரமே...

இங்கே

"திணை விதைத்தவன்
திணை அறுப்பான்,
விணை விதைத்தவன்
விணை அறுப்பான்"

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (15-Mar-14, 5:21 pm)
பார்வை : 324

மேலே