காதல்
என்னுள் ஆதியும் அந்தமுமாய் வியாபித்திருக்கிறாய்!
அடியும் முடியுமாய் உயர்ந்து நிற்கிறாய்!
எண்ணமும் ஏக்கமுமாய் நிறைந்திருக்கிறாய்!
உயிரும் உணர்வுமாய் கலந்திருக்கிறாய்!
காதலும் காமமுமாய் சங்கமித்திருக்கிறாய்!
நம்பிக்கையும் நனியுமாய் நிரவீயிருக்கிறாய்!
குருதியும் புனலுமாய் ஓடிக்கொண்டிருக்கிறாய்!
இதயமும் ஒலியுமாய் துடித்துக்கொண்டிருகிறாய்!
சிந்திக்கிறேன் எப்போது(ம்) சந்திப்போமென்று!!!