விடியலை நோக்கி
விடிந்து விட்டதென
கோழி கூவலாம்...... ஆனால்,
அதை ஒரு போதும்
என்மனம் நம்பாது.......
உதிர்ந்துப்போன சருகளாய்
ஒரு ஓரமாய்க்கிடகிறதே...
என் மனித சமூகம்.....
நடைபாதையில் தூங்குகிற
மக்கள் என்றுதான்....
மேடைக்கு வருகிறார்களோ
அன்றுதான் விடியல் ஆரம்பம்.....
மானிடனே விடியலை
ஏன் விற்றாய்.... ?
விடியும்முன் சுருட்டலாமென்றா .....?