ஒற்றுமை வார்த்தையில் மட்டுமா

தேவையிது இன்றைய உலகிற்கு
தேவைகளை தேடி அழைபவரே
செவிமடுத்து கொஞ்சம் கேளுங்கள்
ஓடியோடி நீ கலைத்துவிட்டால்
ஓரிடம் நின்றுதான் ஆகவேண்டும்
இதில் அன்புகொள்ள நேரமின்றி
விலங்கிற்கில்லா வினோதகுணம்
மானிடமே அது உன்னிடமெதற்கு
தன்னினம் அழிக்கின்ற தரங்கெட்ட
செயலெதற்கு அதிக காலமில்ல
அழிந்துவிடும் வாழ்க்கையிது
அழிப்பதற்காய் அழைவதேனோ
அரவணைக்க கரம்தர மறுத்தே
நீ ஆணவம் கொள்வதேனோ ,,,,

வாருங்கள் உறவுகளே வாருங்கள்
நம் நேசக்கரங்கள் ஒன்றிணைத்து
தேங்கினிற்கும் கவலை அகற்றி
எதிர்காலம் மேன்மையுற செய்ய
வரும் தலைமுறைக்கு வழிகாட்ட
வாழ்வை வளமாக்க மகிழ்ச்சியில்
திளைத்திட மனங்கள் குளிர்ந்திட
இன்பத்தில் குளித்திட எல்லைகள்
கடந்து அந்த எல்லையை கடத்தி
எல்லையில்லா அன்போடு ஆயுள்
உள்ளவரை ஆனந்தமாய் வாழ்ந்திட
வேற்றுமையை அகற்றி காழ்புணர்வு
களைந்து என்றும் இன்முகத்தோடு
வாருங்கள் உறவுகளே வாருங்கள் ..

நேசக்கரம் நீட்டி அழைக்கும்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (24-Mar-14, 2:32 pm)
பார்வை : 997

மேலே